உன்னை நினைத்து நான் காணும் கனவுகள் அனைத்தும் கனவாக செல்ல விடமாட்டேன் ...
காரணம் ....
என் வாழ்வில் நான் கண்ட கனவுகள் அனைத்தையும் வென்று விட வேண்டும் என்ற எண்ணம் அதிகம் உண்டு....
சில கனவுகள் கலைந்து போனாலும்...
நம் காதலை மட்டும் விட்டு கொடுக்க மாட்டேன்...
அது என்னை படைத்த இறைவனே ஆனாலும் சரி...
உன்னை பிரிந்து இருக்கையில் தன தெரிகிறது இறப்பின் வலி என்னவென்று ...
என்னை நீங்கி நீ இருப்பது ஏன் என்று தெரியவில்லை ...
ஆனால் காத்து இருப்பேன் என் மரணத்தின் முன்பாவது உன்னை கரம் பிடிக்க....
நீ என்னிடம் கட்டிய அன்புக்கு அளவு இல்லை... நான் செய்யும் தவறுகளை மன்னித்து ...
என்னை மாற்றி... எனக்காக செய்வதாய் சொல்லும் பொழுது தான் தெரிந்தது ....
நீ நம் வாழ்க்கையை பற்றி யோசித்த அழகு..
உன்னை என் வாழ்க்கையில் பெற்றதற்கு பெருமிதம் கொள்கிறேன் ...
உன் கைகள் கோர்ப்பதனால் மனதில் நிம்மதி ..
காரணம் இல்லாமல் இருந்த சோகங்கள் கூட அழிந்து விட்டது..
உன்னை தவிர வேறு எந்த ஒரு பெண்ணாலும் என்னை இவ்வளவு அழகாய் நேசிக்க முடியாது...
உன்னை எனக்காக படைத்த கடவுளுக்கு நன்றி...
உன் அன்னைக்கும் நன்றி... என் வாழ்கை முழுதும் உன் அன்பிற்கு அடிமை...
நான் உன்னை பார்க்கும் வரை காதல் மீது நம்பிக்கை அற்று இருந்தேன்..
உன்னை கண்ட பிறகு... என்னை மறக்க நேர்ந்தது ...
இன்றும் என்றும் ஆசை கொள்கிறேன் ..
உன்னுள் என்னை மறக்க ...
காதலுக்கு நாம் புதிது அல்ல... காதல், பல கதைகளை பார்த்து விட்டது ...
சண்டைகள் வந்தாலும் என்றும் அன்புடன் தான் வாழ்கிறோம் ...
தவறுகள் செய்வதனால் நாம் விட்டு விலகுவதில்லை ...
காரணம் ...
காதலுக்கு அழிவும் இல்லை... நம் காதலுக்கு எல்லையும் இல்லை...
ஆயிரம் பிடித்த விஷியங்கள் செய்தலும் நான் செய்யும் சிறு பிழைகள் மட்டுமே உன்னை சிரிக்க வைத்து விடுகிறது...
பிழை என்று தெரிந்தும் அதனை செய்கிறேன்... உன் முகத்தில் அந்த அழகிய புன்னகைக்காக...
நான் உன்னை ரசித்த அளவிற்கு கூட வானம் நிலவை ரசித்திருக்காது ..
காற்றில் வரும் ஒவ்வொரு சுவாசமும் உன்னுடையதாக இருக்காதா என்று ஏங்குகிறேன்...
உன் இதயம் என்னை கொள்ளை கொண்டதால் இன்று வரை மயக்கம் தெளியாமல் உள்ளேன்..
மீண்டும் உன் இதயத்தில் வீழ்வதற்கு ...
உன் சுவாசம் என் மீது படும் பொழுது தான் தெரிகிறது...
"தென்றல்" என்பது உண்மை என்று...
உன்னை அடைய ஆசை இல்லை....
உன்னிடம் அடை பட்டு கொள்ள தான் ஆசை... உன் இதய சிறையில் ...
முற்றிலும் அந்த அன்பு கலந்த தென்றலுக்காக ...
"நான் தோல்வியை கண்டதில்லை"...
நீ என்னிடம் தோல்வியுற்று சில காலங்கள் ஆகி விட்டன...
இப்படிக்கு -- காதல் ......
அழகே நிலவிடம் நான் கூறினேன் "உன்னை விட அழகாய் ஒரு பெண்ணை கண்டேன்" என்று...
உன்னிடம் நான் அவளை காட்டும் பொழுது உன் வானம் முழுதும் வெட்கத்தில் இருள் சூழும் என்று ...
நிலவு இப்பொழுது உணர்ந்தது "நான் ஏன் இத்தனை காலங்களாய் மண்ணில் பிறக்கவில்லை..."..
காதல் முற்றிலும் உணர்வுகளுக்காக ... அதனில் அன்பும் உண்டு கோபமும் உண்டு...
உணர்வுகளை ரசிக்கும் போது தான் காதலின் அழகு தெரியும்..
காதலித்து பார் உணர்வுகளை உணர்வாய் ...